சாலைப்பணியாளர்கள் முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம்
1 min read
Road workers protest wearing masks
27.8.2025
சாலைப்பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்றக் கோரி சென்னையில் ஆகஸ்ட் 12 அன்று நடை பெற்ற தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் பங்கேற்ற சாலைப்பணியாளர்களை கைது செய்த அரசையும், காவல்துறையையும், கண்டித்து தென்காசியில் முகமுடி அணிந்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
தென்காசி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் பாப்புராஜ் தலைமை வகி த்தார். தமிழ்நாடு வேலை
வாய்ப்புத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் க.மார்த்தாண்ட பூபதி, கோட்டச் செயலாளர் வேல்ராஜன், தமிழ்நாடு சமூக நலப்பணி யாளர் சங்க மாநிலபொது செயலாளர் துரைசிங் அரசுஊழியர் சங்க மாவட் டச்செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் பேசினர்.