மோசடியை தவிர்க்க யுபிஐ செயலியில் புதிய அம்சம் வருகிறது
1 min read
New feature coming to UPI app from next year
வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடி மூலம் சில வினாடிகளில் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வகை பரிவர்த்தனை வேகமாகவும் இருப்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுபிஐ களில் நடைபெறும் மோசடிகளை தவிர்க்கும் விதமாகவும் பயனர்களின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் அவ்வப்போது புதிய அப்டேட்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் புதிய அம்சம் ஒன்று யுபிஐயில் அறிமுகம் ஆக உள்ளது. இந்த வசதியின் படி, யுபிஐ வழியிலான ஆட்டோ பே (Auto Pay) களை பயனர்கள் பார்க்கவும், அவற்றை மேலாண்மை செய்யவும் முடியும். இதன்படி ஆட்டோ பே ஆப்ஷனை செயல்படுத்துவதை பயனர்கள் எளிதாக அறிந்து கொள்வதோடு, அவற்றை நிறுத்துவதும் எளிதாக இருக்கும் என்று பயனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.