August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

திருத்தணி ரெயில் நிலையத்தில் புடவை வியாபாரி மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்

1 min read

Youths attack sari vendor at Tiruttani railway station – Annamalai condemns

31.12.2025
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையிலேயே, நேற்று திருத்தணியில் மேலும் ஒரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் வியாபாரி, எந்தவிதத் தூண்டுதலும் காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

இது இனி தனிப்பட்ட சம்பவமல்ல. கடந்த சில ஆண்டுகளாக தமிழகமெங்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது, ஒரு அச்சமூட்டும் போக்காக மாறியுள்ளது. சட்டவிரோதச் செயல்கள் சாதாரணமாகி வருகின்றன. குற்றவாளிகள் தைரியமடைகிறார்கள்; சாதாரண மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தங்களின் முழுமையான தோல்வியை திமுக எப்போது ஏற்றுக்கொள்ளப் போகிறது? இன்னும் எத்தனை சூரஜ்களும் ஜமால்களும் பாதிக்கப்பட வேண்டும்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *