June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மருமகனுக்கு 290 வகையான உணவு பரிமாறி அசத்திய மாமியார்

1 min read

Mother-in-law surprises son-in-law by serving 290 types of food

16.1.2026
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி கலாவதி. இவர்களின் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

மருமகனுக்கு பல்வேறு வகையான உணவுகளை சமைத்து பரிமாற கலாவதி முடிவு செய்தார். அதன்படி இன்று ஆடு, கோழி, முட்டை, மீன்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் என 290 வகையான உணவுகளை சமைத்து அறை முழுவதும் பரப்பி வைத்திருந்தனர். மருமகனுக்கு பிரமிப்பு ஏற்படுத்துவதற்காக அவரது கண்ணை துணியில் கட்டி அழைத்து வந்தனர்.

உணவு அடுக்கி வைத்து இருந்த அறையில் கண்ணை கட்டிய துணியை அவிழ்த்து விட்டனர். 290 வகையான உணவு வகைகளை கண்ட மருமகன் என்ன செய்வது என்று தெரியாமல் அசந்து போனார். இதேபோல் பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *