ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட சிவபத்மநாதன் விருப்ப மனு
1 min read
Sivapathmanathan’s application to contest from Alankulam constituency
28.2.2026
ஆலங்குளம் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தனது விருப்பமனுவை அண்ணா அறிவாலயத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவை தலைவர் மா.சுந்தர மகாலிங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ ஆறுமுகச்சாமி, ஒன்றிய கழகச் செயலாளர் கடையம் ஆ.ஜெயக்குமார், குருவிகுளம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மா.கடற்கரை, கிறிஸ்டோபர், திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை, மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ் பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இ.இசக்கி பாண்டியன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் காசிதர்மம்துரை, மாவட்ட பொறுப்புக் குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள், துணை அமைப்பாளர் பொன்னரசு, மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திருமலை குமார், மாநில பேச்சாளர் நெல்லை முத்தையா, தொண்டரணி குலசை ரவிச்சந்திரன், தொழிலதிபர் சட்டநாதன், ,தொமுச பொருளாளர் செல்வகுமார், முன்னாள் இளைஞர் அணி சங்கை குமார், ஆலங்குளம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்த் திலக், தென்காசி வார்டு செயலாளர் ஐயப்பன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா, வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது யாகூப், சம்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சதாம் உசேன் மாலிக், நகர் செயலாளர் அகமது ஈசாக், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பொன் மோகன்ராஜ், மாவட்ட மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன், கழக வழக்கறிஞர் ஜெயக்குமார், வழக்கறிஞர் கணேஷ் பாண்டியன், காசி மேஜர்புரம் ஏ.கே .பி.கனகராஜ், பரங்குன்றாபுரம் செல்வம், வேல்முருகன், உதயகுமார், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.