June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

குடிபோதையில் அவைக்கு வந்த முதல்-மந்திரி பகவந்த் மான்…?

1 min read

Chief Minister Bhagwant Mann came to the assembly drunk…?

1/5/2–026
பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், முதல்-மந்திரி பகவந்த் மான் மது குடித்து விட்டு, அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார் என காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளன.

இதுதொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் என்றும் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதனை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுக்பால் சிங் கைரா வலியுறுத்தியதுடன், எங்களுக்கும் இந்த சோதனையை நடத்த வேண்டும் என்றும் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றும் கூறினார். முதல்-மந்திரிக்கு எதிராக, கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

அவையின் எதிர்க்கட்சி தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா கூறும்போது, முதல்-மந்திரி குடிபோதையில் இருக்கும்போது, நாங்கள் அவைக்கு வருகை தந்து என்ன செய்து விட முடியும்? மாநில தலைவர் முற்றிலும் மயக்கத்தில் இருக்கும்போது, அவையை நடத்துவதன் நோக்கம் என்ன? அதனால், ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்.
இன்று தொழிலாளர் தினத்தில் முதல்-மந்திரி குடிபோதையில் அவைக்கு வந்திருப்பது பெரிய வெட்கக்கேடு என ஷிரோமணி அகாலி தளம் கட்சி தெரிவித்து உள்ளது.

பா.ஜ.க.வின் சுனில் ஜாக்கரும் கூட, சுவாச பகுப்பாய்வு பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அப்போது பலரின் முகமூடி களையப்படும் என்று கூறினார். இதுதொடர்பாக முறைப்படி சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

கச்​சேரி​யின் சவுண்டு தாங்​காமல் அங்கு இருந்த 140 கோழிகள் இறந்​துள்ளது. இது தொடர்​பாக தரி​யாபூர் காவல் நிலை​யத்​தில் கோழிப்​பண்ணை உரிமை​யாளர் சாபீர் அலி, புகார் அளித்​தார். இதையடுத்து உயி​ரிழந்த கோழிகளுக்​கான உடற்​கூறு ஆய்வு நடத்​தப்​பட்​டது. இதில் டிஜே இரைச்​சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்​படுத்​தி​ய​தாக​வும் இதனால் ஏற்​பட்ட மாரடைப்​பால் 140 கோழிகள் இறந்​த​தாக​வும் தெரிய​வந்​தது.

இதுகுறித்து உடற்​கூறு ஆய்வு நடத்​திய தலைமை கால்​நடை மருத்துவ அதி​காரி பிரமோத் சர்மா கூறுகை​யில், “திருமண ஊர்​வலத்​தின் டிஜே வாக​னம் கோழிப்​பண்​ணையை கடந்து சென்​ற​போது, அதிலிருந்து வெளி​யான உரத்த இரைச்​சலும் அதிர்​வு​களும் அங்​கிருந்த கோழிகளைப் பெரிதும் மிரளச் செய்​தது. இந்​தத் திடீர் பீதி காரண​மாக கோழிகள் மிரண்​டு​போய், கண் இமைக்​கும் நேரத்​தில் 140 கோழிகள் பட படவென உயி​ரிழந்​துள்​ளன.

மாரடைப்பு காரண​மாக உயி​ரிழந்த கோழிகளுக்​கு, உரத்த இரைச்சலும், அதனால் ஏற்​பட்ட மன அழுத்​தச் சூழலும் தாங்க முடி​யாமல் போய் உள்​ளது. இதுவே கோழிகளின் உயி​ரிழப்​புக்கு ஒரு முக்​கியக் காரண​மாக அமைந்​திருக்​கலாம் என்​றார்.

இந்த உடற்​கூறு ஆய்​வறிக்​கை​யின் அடிப்​படை​யில் டிஜே இசைக் கச்​சேரி நிர்​வாகி கவி யாதவ் மீது போலீ​சார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்தி வருகின்றனர். வினோத​மான இந்தப் புது​வித வழக்கு உ.பி.யில் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *