தேர்தல் தோல்வி குறித்து தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
1 min read
Tamilisai Soundararajan interview on election defeat
4.5.2026
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் விஜய் முதல் அமைச்சராகிறார். பாஜக சார்பில் மயிலாப்பூரில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தோல்வி அடைந்தார். அவர் கூறி இருப்பதாவது;
”அரசியலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.. தோற்கலாம். தேர்தல் முடிவுகளை விஜய் அலை என்று சொல்வதா? அல்லது திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா என தெரிந்துகொள்ள வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தோல்வியடைந்த வேட்பாளர்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். எங்கள் அரசியல் இன்னும் தீவிரமாக தொடரும்.”
இவ்வாறு அவர் கூறினார்.