திருப்பதிக்கு மின்சார பேருந்து நன்கொடையாக வழங்கிய சென்னை பக்தர்
1 min read
Chennai devotee donates electric bus to Tirupati
16.5.2026
சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி கோவிலுக்கு மின்சார பேருந்து ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். சென்னையை சேர்ந்த வர்தமான் ஜெயின் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கையா சவுத்ரியிடம் பேருந்து சாவியை நேற்று ஒப்படைத்தார்.
பின்னர் கோவில் முன்பு அந்த பேருந்துக்காக வர்தமான் ஜெயின் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்த பேருந்து பக்தர்களை இலவசமாக ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.