July 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆந்திராவில் நாய் குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி

1 min read

Pig nurses puppies in Andhra Pradesh

7/7/2026
ஆந்திர மாநிலத்தில் தாய் நாய் இறந்ததால் பசியோடு திரிந்து கொண்டிருந்த 5 குட்டிகளுக்கு பன்றி பால் கொடுத்த சம்பவம் மக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், கோசிகி அடுத்த ஜாம்பாபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 குட்டிகளை ஈன்ற தாய் நாய் இறந்துவிட்டது. தாய் நாய் இறந்ததால் அதன் குட்டிகள் பசியோடு அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தன.

இதனை கண்ட பன்றி ஒன்றுக்கு தாய்மை உணர்வு வந்தது. பன்றி நாய்க்குட்டிகளின் அருகில் படுத்துக்கொண்டது. நாய்க்குட்டிகளும் அச்சமின்றி பன்றியிடம் பால் குடித்து பசியை தீர்த்துக் கொண்டன. பன்றியும் நாயும் சந்திக்கும்போது சண்டை ஏற்படும் அவற்றிற்கிடையே அப்படி ஒரு இன பகை உள்ளது.

இந்த நிலையில் பன்றி நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த சம்பவம் பகுதி மக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *