August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

சேவாலயா மையத்தில் சுதந்திர தினவிழா

1 min read

Independence Day Celebration at Sevalaya Centre

15.8.2026
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே கசுவாவில் அமைந்துள்ள சேவாலயா மையத்தில், இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் 15 ஆகஸ்ட் 2026 அன்று கொண்டாடப்பட்டது. சேவாலயாவின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான ‘ஆலம் விழுதுகள்’ இந்நிகழ்வை ஏற்பாடு செய்தது.

கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் டாக்டர் ஹேமலதா ஜே அவர்கள் விழாவில் தனது கணவர் ரகு அவர்களுடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். சேவாலயாவின் முன்னாள் மாணவர் அபினேஷ் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் நடைபெற்றது. சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வா முரளிதரன், சேவாலயாவின் இணை நிறுவனர் மற்றும் கௌரவத் தாளாளர் புவனேஸ்வரி முரளிதரன் மற்றும் சேவாலயா அறங்காவலர் அன்னபூர்ணா என் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சென்னை, அம்பத்தூர், செங்கல்பட்டு, தர்மபுரி, கூடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட சேவாலயாவின் 66 மையங்களிலும் சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள், பணியாளர்கள், பயனாளிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இக்கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *