August 18, 2026

Seithi Saral

Tamil News Channel

முதுமலை வனப்பகுதியில் 3 யானைகள் உயிரிழப்பு

1 min read

Severe drought in Mudumalai forest area: 3 elephants die18.8.2026
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் யானைகள் முகாம் அமைந்துள்ளது. பருவமழை இல்லாத காரணத்தால் அந்தப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் மசினகுடி வனச்சரகத்தில் கடந்த 8-ந்தேதி ஒரு யானையும், நேற்று முன்தினம் குதிரைப்பாறை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானையும் உயிரிழந்தன. இந்நிலையில், இன்றும் (செவ்வாய்க்கிழமை) அதே பகுதியில் மற்றொரு பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு (ஆகஸ்ட்) மாதத்தில் போதிய மழையின்றி காடுகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குட்டைகள் முற்றிலும் வறண்டுவிட்டன. இதனால் உணவும் குடிநீரும் கிடைக்காமல் காட்டு விலங்குகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.

வனவிலங்குகளின் தாகத்தைத் தணிக்க, லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரைச் செயற்கைத் தொட்டிகளில் நிரப்பும் அவசரப் பணிகளை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்த யானைகளின் உடற்கூறுகள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. வறட்சி அல்லது வேறு ஏதேனும் நோய் பாதிப்பு காரணமா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *