தாசி குலத்தில் பிறந்தாலும் தரணியை காத்த குஞ்சிரத்தம்மாள்
1 min read
- Sace lot of people by Thasi Kusaraththammal
தாசி குலத்தில் பிறந்தாலும் தரணியை காத்த குஞ்சரத்தம்மாள்
7/4/2020
அவளை யார் பார்த்தாலும் ஒரு நிமிடம் அப்படியே அசந்து போவார்கள். அவ்வளவு அழகு. மதுரை மேல ஆவணி மூல வீதியில் உள்ள பெரிய பங்களாத்தான் அந்த அழகு தெய்வத்தில் கோவில். அவள் அந்த சன்னிதானத்தில் இருந்து வெளியே வந்தால் மீனாட்சி அம்மன் வீதி உலா வருவதைக் காண திரண்டுநிற்கும் பக்தர்கள் போல் இந்த அழகு தேவதையை பார்க்க ஏராளமானோர் திரண்டு நிற்பார்கள்.
அந்த மக்களால் அந்த அழகியை பார்க்கத்தான் முடியும். ஆனால் அவள் அருகே நெருங்க முடியாது. உயிர் பெற்ற அந்த அழகு ரதத்தின் பெயர் குஞ்சரத்தம்மாள். ஒப்பனை இல்லாமல் ஒப்பில்லா அழகுப் பெண் அவள்.
அவளின் வனப்புதான் அவளுக்கு வளத்தை தந்தது.
வெள்ளையர்கள் ஆண்ட அந்த காலத்தில் அவளை அனுபவிக்க பணத்தைக் கொண்டு கொட்டியவர்கள் பலர். அவளின் அரவணைப்புக்கு முன்பதிவு செய்தர்களும் உண்டு.
இது குஞ்சரம்மாளின் குலத்தொழில் ஆம் அவள் தாசி குலத்தில் பிறந்தவள். அதனால் அவள் தவறு இளைத்தவள் என்று சொல்ல முடியாது. அவளை யாரும் அப்படி சொன்னதும் அல்ல.
தாது வருட பஞ்சம்
இந்த நிலையில்தான் 1800 ஆம் ஆண்டு முதல் போதிய மழை பெய்யவில்லை. 1876-1877 -1876ம் ஆண்டில் தாது (தமிழ்) வருடத்தில் பஞ்சம் உச்சக்கட்டத்தில் இருந்துது. 1976-ல் 30 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை, 1880இல் 25 கோடியாக குறைந்ததாக வரலாற்று குறிப்பு கூறுகிறது.. அந்தப் பஞ்சத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்னாட்டில் மட்டும் 5 கோடி பேர் இறந்துவிட்டனர்.
மழை பொய்த்ததால் இந்த பஞ்சம் ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் இந்த வறட்சி கோர தாண்டவம் ஆடுவதற்கு வெள்ளையர் ஆட்சியும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது- எந்த நோக்கத்தற்காக வெள்ளையர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்களோ அதை நிறைவேற்ற தொடங்கிய காலம் அது. ஆம் முக்கிய ஊர்களை இணைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கிய காலம் அது. ஆங்காங்கே விளையும் பொருட்களை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். இதனால் தமிழகத்தில் உணவுப் பொருள் இருப்பு இல்லாமல் போது. இதனால் அந்த பஞ்சத்தை ஓரளவாவது தாங்கும் நிலையில் மக்கள் இல்லை.
பஞ்சம் என்றால் அதை சொல்லில் விவரித்து விட முடியாது. கலாரா பற்றி கேள்வி பட்டிருப்போம். அந்த கொடிய நோய் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து பலரை க் கொன்றுவிடும். ஆனால் இந்த பஞ்சம் உணவின்றி பலரை கொன்று குவித்தது. எலும்பும் தோலுமாக குழிவிழுந்த கண்களோடு அடுத்து இறக்கப்போவது யார் என்ற மரண பயம் அனைவரிடமும் இருந்தது.
வசதி படைத்தவர்களுக்கு மஞ்சம் விரிந்த குஞ்சரத்தம்மாள் வாழ்வின் முடிவுக்கு வந்துவிட்ட எழைகளின் பஞ்சத்தை போக்க துணிந்தாள். தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு தனது வீட்டிலேயே பெரிய அண்டாவில் சமையல் செய்து எல்லோருக்கும் கொடுத்தாள். ஒருவேளை கஞ்சாவது கிடைக்கும் என்று மதுரை மட்டுமல்லாது சுற்று கிராமங்களில் இருந்து அங்கு படை எடுக்க ஆரம்பித்தார்கள். ஒரு வேளை சோற்றுக்கு வரிசையில் நின்றவர்களுக்கு வாரி வாரி வழங்கினார், குஞ்சரத்தம்மாள். 24 மணி நேரமும் அவள் வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டே இருந்தது. இந்த அன்னம் வழங்கும் பணி தாது வருடம் தொடங்கி இரண்டாவது மாதம் ஆரம்பமானது. குஞ்சரத்தம்மாளின் கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்தது. அதன்பின் தனது பங்களாவை விற்று தொடர்ந்து சமைத்து போட்டார். இந்த உணவு வழங்கும் வேலை தாது வருடம் முடிந்த பிறகும் நீடித்தது- பஞ்சம் ஓரளவு மறைந்தது- குஞ்சரத்தமாளின் நிலையும் மோசமானது. பணம் முழுவதும் கரைந்ததோடு உடல் நலமும் பாதிக்கப்பட்டது. இந்த கொடை வள்ளலை இயற்கை அழைத்துக் கொண்டது. அந்த புண்ணியாட்டியால் உயிர் பிழைத்தவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர். அந்த அன்னபூரணியின் ஆயுள் முடிவடைந்ததைக் கண்டு அனைவரின் கண்களிலும் கண்ணீர் சிந்தியது. அவளது இறுதி ஊர்வலத்திற்கு மதுரை சித்திரை திருவிழாவுக்கு திரண்டதுபோல் மக்கள் திரண்டு இருந்தனர்.
இந்த வரலாற்றை இப்போது ஏன் நினைவு படுத்துகிறேன் என்றால் தற்போது கொரோன என்ற கொடூர நோய் காரணமாக இந்தியா பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது. தமிழகமும் பணம் இன்றி தவிக்கிறது.
இந்த நிலையில் நாட்டுக்கு உதவுவர்களை இந்த மக்கள் மனதார போற்றுவார்கள்.
சமுதாயத்தால் இழிவாக பேசப்படும் தாசிகுல பெண் தக்க சமயத்தில் செய்த தானம் அவளை தெய்வ நிலைக்கு கொண்டு சென்றது. தானம் மற்றும் நன்கொடையின் சிறப்பு அவ்வளவு மகத்துவமானது.
அணிலைப்போல்…
ராமாயணத்தில் இலங்கைக்கு வானரப்படைகள் பாலம் அமைக்கும்போது அணில் ஒன்று மணலில் உருண்டு உடலில் ஒட்டிய மணலை கடலில் சேர்த்து பாலம் கட்ட உதவியதாம். அதனால் அந்த அணிலை ராமபிரான் தடவிக் கொடுத்ததாகவும் ஒரு கதை உண்டு. இந்த கதை வால்மிகி ராமாயணத்திலும் இல்லை. கம்பராமாயணத்திலும் இல்லை. தக்க சமயத்தில் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதை விளக்க புனைய வைக்கப்பட்ட கதையாககூட இருக்கலாம்.
தான் வசதி படைத்தவனாக இல்லை என்றாலும் தன்னால் இயன்ற உதவியை நாட்டுக்காக செய்யலாமே.
கடையம் பாலன்.