June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

நரை முடி பிரச்சினைக்கு தீர்வு தரும் பாதாம் எண்ணெய்

1 min read
Almond oil is the solution to the problem of grey hair

நரை முடி பிரச்சினைக்கு தீர்வு தரும் பாதாம் எண்ணெய்

நமக்கு வயதானதற்கான ஒர்அறிகுறி நம் தலையில் உள்ள நரை முடிகள். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் பல பேருக்கு இளைமையிலேயே நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு இளநரை எனப்பெயர். இது தோற்றத்தை பாதிக்கும். சில நேரங்களில் அது உங்கள் நம்பிக்கையை குறைக்கும். வைட்டமின் பி 12 குறைபாடு, கடுமையான இரும்புச்சத்து குறைபாடு, நாள்பட்ட புரத இழப்பு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளால் முடிகள் நரைக்கும்.

இந்த குறைபாட்டை போக்குவதற்கு , உங்கள் உணவில் நிறைய கீரைகள், புதிய பழங்கள் மற்றும் தயிர் சேர்க்கவும். இது உங்கள் கூந்தலை மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை மென்மையாகவும் மாற்றும். உங்கள் தலைமுடி நரை பிரச்சனைக்கு தீர்வுகள் உங்கள் சமையலறையிலேயேதான் இருக்கிறது. உங்கள் நரை முடியை கருப்பு நிறமாக மாற்ற பல வணிக தயாரிப்புகள் உள்ளன. ஆனால் அவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. எனவே, இந்த வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்துங்கள்…

பாதாம் எண்ணெய் – எலுமிச்சை சாறு!

பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை சரி விகிதத்தில் கலக்க வேண்டும். இந்த கலவையை உச்சந்தலை மற்றும் கூந்தலில் நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் விட்டுவிட்டு பிறகு குளிக்கவேண்டும். பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ ’உள்ளது. இது நரைப்பதைத் தடுக்கிறது. எலுமிச்சை சாறு ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

நெல்லிக்காய் முடி மாஸ்க்

அம்லாவில் வைட்டமின் சி நிறைந்ததுள்ளது. இதனுடன் வெந்தயத்தை கலந்து அரைத்து முடியில் தடவிவர நரையை தடுக்க முடியும். இது முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.

கறிவேப்பிலை + எண்ணெய்!

சிறிது கறிவேப்பிலை எடுத்து அது கருப்பு நிறமாக மாறும் வரை ஒரு கப் எண்ணெயுடன் வதக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை இரவில் தலைமுடியில் மசாஜ் செய்து விட்டு காலை குளிக்கலாம். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்யுங்கள். கறிவேப்பிலையில் வைட்டமின் `பி ’நிறைந்துள்ளது.

மருதாணி மற்றும் காபி கலவை!

இரண்டு மூன்று கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் காபி பவுடர் சேர்க்கவும். பின் அது சூடு குறைந்தவுடன் மருதாணி பொடியை அதனுடன் கலந்து வைக்கவும். இந்த பேஸ்ட்டை அப்படியே சில மணி நேரம் மூடி வைக்கவும். பின் அதனுடன் உங்களுக்கு விருப்பமான எந்த எண்ணெயிலும் 1 டீஸ்பூன் சேர்த்து, முடி முழுவதுமாக தடவுங்கள். ஒரு மணி நேரம் விட்டுவிட்டு லேசான ஷாம்பூவுடன் கழுவ வேண்டும். மருதாணி ஒரு இயற்கை கண்டிஷனர் மற்றும் ஒரு நிறமியாக செயல்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.