அமெரிக்காவில் 40 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
1 min readஅமெரிக்காவில் 40 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
கொரோனா வைரஸின் தலைநகரமாக அமெரிக்க மாறியுள்ளது. உலகில் முதல் முறையாக அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால் இத்தாலியின் உயிரிழப்புகளை அமெரிக்கா கடந்துவிடும்.
இந்நிலையில் கொரோனா வைரஸால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 40 பேர் உயிரிழந்துள்ளதாக, அங்குள்ள இந்திய சமூகத்தினர் தெரிவித்தனர். மேலும், 1,500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாநிலங்கள் தான் கொரோனா வைரஸின் முனையங்களாக உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் தான் அதிகளவு இந்தியர்களும் வசிக்கின்றனர். நியூ ஜெர்சியில் லிட்டில் இந்தியா என்ற ஒரு பகுதியே உள்ளது. இங்கு இந்திய தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். கொரோனாவால் உயிரிழந்த இந்தியர்களில் 17 பேர் கேரளா, 10 பேர் குஜராத், நான்கு பேர் பஞ்சாப், இருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஒடிஷா. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவருக்கு மட்டும் 21 வயது.
அங்குள்ள பல இந்திய சமூக தலைவர்கள், ஆன்லைன் மற்றும் சமூக ஊடக பிரசாரங்கள் மூலம் ரத்த பிளாஸ்மா கொடையாளர்களை தேடி வருகின்றனர். நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரத்த பிளாஸ்மாவை செலுத்துவதன் மூலம், கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலை உடல் பெறும்