May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில், ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா

1 min read
In India, Corona has 8,909 people one day

3-5-2020

இந்தியாவில் ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

8,909 பேருக்கு கொரோனா

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி கொரோனா நிலவரம் குறித்து இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில், இன்று காலை 11.15 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 8,909 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,98,706 ல் இருந்து 2, 07,615 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தவர்களில் ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,303, ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தற்போது 1,01,497 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாக…

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும்(அடைப்புக்குறிக்குள்) மாநில வாரியாக வருமாறு:-

மராட்டியம் – 72,300 (2,465)
தமிழ்நாடு – 24,586 (197)
டெல்லி – 22,132 (556)
குஜராத் – 17,617 (1,092)
ராஜஸ்தான் – 9,373 (203)
மத்திய பிரதேசம் – 8,420 (364)
உத்தர பிரதேசம் – 8,361 (222)
மேற்கு வங்காளதேசம்- 6,168 (335)
ஆந்திரா – 3,898 (64)
கர்நாடகா- 3,796 (52)
தெலுங்கானா – 2,891 ( 92)
கேரளா – 1,412 (11)
புதுச்சேரி- 82 (0)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.