சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
1 min read
What action has the government taken to control the corona in Chennai?
9-6-2002
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்ன என்பதை தினமும் அதிகாரியோ, அமைச்சரோ விளக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பீதி
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்தி வருகிறது.
சென்னையை பொறுத்தவரை வட சென்னையில்தான் அதிகமாக பரவுகிறது. அதற்கு அடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகமாக பரவி வருகிறது.
சென்னையோடு இணைந்து இருக்கும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் இருக்கத்தான் செய்கிறது. எனவே இந்த 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்கிறது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு இல்லை. பஸ், ரெயில் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை. அதேநேரம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல்கூட ஏற்படுகிறது
வதந்தி
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு படுக்கை வசதி , சிகிச்சை வசதி செய்து வருகிறது.ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
வடசென்னையில் அதிகமாக பரவுவதால் அந்த பகுதியை தனிமை படுத்துவார்கள் என்றும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்படும் என்றும் பரவலாக கருத்து வெளியாது. ஆனால் இது வெறும் வதந்தி என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொரோனாவை கட்டுபடுத்து இவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்டு உள்ளார். மேலும் கொரோான தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அமைச்சர்களை முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அறிவுரை தேவை
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சென்னை மக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த பீதியை போக்க வேண்டியது அரசின் கடமை. அரசு நாள் தோறும் எடுக்கும் நடவடிக்கை குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்.
தினமும் சுகாதாரத் துறையால் நியமிக்கப்பட்ட பணியாளர் வீடுதோறும் வருகிறார். அவர் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் இருக்கிறதா என்று கேட்டறிந்து செல்கிறார். அவர்கள் மக்களிடம் அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு மருந்து கிடையாது என்பதால் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது எப்படி என்று அவர்கள் அறிவுரை கூற வேண்டும். மேலும் அரசின் சார்பில் கபசுர குடிநீருக்கான மருந்து, ஓமியோபதி மருந்து, சத்து மாத்திரைகளை இலவசமாக வழங்க வேண்டும். அதை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று அந்தப் பணியாளர்கள் விளக்க வேண்டும். எந்தெந்த சத்து பொருட்களை சாப்பிட வேண்டும் என்று அவர்கள் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் . சமூக தொண்டு நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் அவர்கள் மூலமே அதாவது அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும். அப்படியானால்தான் உதவி எல்லா மக்களையும் சென்றடையும்.
ஆசிரியர்கள்
இதற்கெல்லாம் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கும் பணியாளர்கள் போதாது. இதற்கு தற்போது பணிக்கு செல்ல முடியாமல் இருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பயன்டுத்த வேண்டும். அதாவது அவர்கள் இருக்கும் பகுதியிலேயே இந்த பொறுப்பை வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும்கூட இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கலாம்.
ஆசிரியர்கள் பெரும்பாலானோர் தற்போது அவரவர் வீடுகளில் முடங்கித்தான் உள்ளனர். அவர்களை அந்தந்த பகுதியில் விழிப்புணர்வு பணியாளர்களாக நியமிக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.