“அறிவாளின்னு நினைச்சிக்கிட்டு முட்டாளா இருக்கிறீங்க” கமல் ரசிகர் மீது குஷ்பு ஆவேசம்
1 min read
Kushboo rages on Kamal fan
17-6-2020
கமல்ஹாசனின் ரசிகர் ஒருவருக்கு நடிகை குஷ்பு ஆவேசமாக டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அறிவாளின்னு நினைச்சிக்கிட்டு முட்டாளா காட்டுறீங்க என்று கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு
வட மாநிலத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர்தான் குஷ்பு. ஆனால் தமிழகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார். 90 களில் அவரது ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கினார். அதன்பின் சின்னத்திரையிலும் வலம் வந்தார்.
இயக்குனர் சுந்தர்.சி. யை மணந்து குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வரும் குஷ்பு
தற்போது அரசியலிலும் கால் பதித்து தனது கருத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அவர் சொல்லும் சில கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதைப் பற்றி அவர் கவலை கொள்ளாமல் துணிந்த தான் நினைத்தை சொல்லி வருகிறார்.
கமல் ரசிகர்
தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கி கிடந்தாலும் வலை தளங்களில் எதையாவது பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில்தான் கமல் ரசிகர் ஒருவர் குஷ்புவின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.
2003ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம்மான் அன்பே சிவம்.
இந்த படம் வெளியானபோது அந்தப் படத்தின் கதைப்பற்றியும் கமலின் நடிப்பு பற்றி பெருமையாக பேசப்பட்டது. ஆனால் படம் எதிர் பார்த்த வெற்றியை பெறவில்லை. எதிர்பார்த்த வசூலும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட படமாக அன்பே சிவம் இருப்பது குறித்து கமல் ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார். இதைப் பார்த்த குஷ்பு ஆவேசம் அடைந்துள்ளார்.
அதாவது அந்த கமல் ரசிகருக்கு பதில் அளித்த குஷ்பு, “அன்பே சிவம் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தால் என் கணவர் 2 வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது” என்று பதில் அளித்து இருந்தார்.
முட்டாள்
மற்றொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள குஷ்பு, “வின்னர் 2001ம் ஆண்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம…தோல்வியால் கிரி படத்தை சொந்தமாக தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்பே சிவம் 2003ம் ஆண்டும், கிரி 2004ம் ஆண்டும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், அதனால் ரொம்ப அதிகப்பிரசங்கி தனம் பண்ண பண்ண வேண்டாம் அறிவாளின்னு நினைத்துக் கொண்டு முட்டாள்ங்கிற காட்டுறிங்க” என்று கூறியுள்ளார்..