21-ந் தேதி சூரிய கிரகணம்; கர்ப்பணிகளுக்கு எச்சரிக்கை-பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்
1 min read
Solar Eclipse on the 21st; pregnant women to be alert
18-6-2020
இந்த ஜூன் மாதம் 21-ந் தேதி அதாவது ஆனி மாதம் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணம் நிகழ்கிறது. அன்று அமாவாசை திதி மிருகசீரஷம் நட்சத்திரம் 4&ம் பாதம் மிதுன ராசியில் கன்னி லக்கினம் ராகு கிரஸ்தம் வடமேற்கு பகுதியில் கங்கண சூரிய கிரகணம் பிடித்து கிழக்கே கண்கண சூரிய கிரகணம் பிரதமை திதியில் முடிவடைகிறது.
இந்த சூரிய கிரகணம் காலை 10.22 மணிக்கு ஆரம்பமாகிறது. 12.02 மணி கிரகணத்தின் மத்திய காலம் ஆகும். பகல் 1.42 மணிக்கு கிரகணம் முடிகிறது. இந்த கிரகணம் மொத்தம் 3 மணி 20 நிமிடம் நீடிக்கும். கிரகணத்தின் போது ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களும் சாந்திசெய்து கொள்ள வேண்டும்.
கிரகணம் முடிந்த பின் 2 மணிக்கு குளித்துவிட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றை தினம் பகல் 2 மணிக்கு மேல் சாப்பிட வேண்டும்.
கர்ப்பிணிகள் காலை 10 மணி முதல் 2 மணி வரை சூரியனை பார்க்க வேண்டாம். வெளியே வரவும் கூடாது. அவர்கள் 2 மணிக்கு குளித்துவிட்டு சூரியனை தரிசனம் செய்யலாம்.
கோவில் மற்றும் வீடுகளை பகல் 2 மணிக்க சுத்தப்படுத்தி குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும்.
21.6.2020 அன்று சூரிய கிரகணம் முடிந்த பின் பகல் 2 மணிக்கு குளிக்க வேண்டும். தோஷ பரிகாரம் செய்பவர்கள் குளிக்கும்போது கீழ் கண்ட மந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
இந்த்ரோ அநலோ யமோ ரிஷோவருணோ
வாயு ரேவச குபேர ஈசோக்நந்து அர்க
உபராககோத்த வ்யதாம் மம றீறீ
என்ற மந்திரத்தை செப்பு தகட்டிலோ பேப்பரிலோ எழுதி அதை கையில் கட்டிக்கொண்டு குளிக்க வேண்டும்.
இந்த கிரகணத்தால் வைசியர்களுக்கு கெடுதல் உண்டாகலாம் வனவிலங்குகளுக்கு பாதிப்பு உண்டாகலாம். பசுக்களுக்கு புதிய நோய் உண்டாகும். எங்கும் வீண் பிரச்சினை ஏற்படலாம்.
கிரகண பலன்கள்
இந்த சூரிய கிரகணம் காரணமாக சத்திரியர்களுக்கு பீடை, பயிர் விருத்தி, கொசுக்களினால் புதிய நோய் உண்டாகும். நட்த்திர பலனாக வீண் மத கலவரம், போராட்டம் உண்டாகும். உத்தராயண பலனாக, சகல ஜீவராசிகளுக்கும் சுபீட்சம் உண்டாகும். எங்கும் மழை பெய்யும்.
-நன்றி- உங்கள் வாழ்க்கை வழிகாட்டி