இறந்துபோன அம்மா சொன்னபடி 27-ந் தேதி திருமணம்; வனிதா உருக்கம்
1 min read
Why is Vanitha 3rd married on the 27th
20-6-2020
இறந்து போன அம்மா மஞ்சுளா சொன்னபடி வருகிற 27-ந் தேதி 3-வது திருமணம் செய்யப்போவதாக நடிகை வனிதா கூறினார்.
வனிதா
விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா. இவர், விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
இவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் வனிதா 3-வதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார். இந்த திருமணமத்திற்கு வனிதாவின் மூத்த மகள் அனுமதி கொடுத்துவிட்டார்.
27-ந் தேதி திருமணம்
இவர்களது திருமணம் ஜூன் 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தனது 3-வது திருமணம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலில் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் வனிதா பேசியிருப்பதாவது:-
காதல்
எனக்கு 27-ந் தேதி திருமணம் நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏன் இந்த திருமணத்தை நடத்த வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கலாம்.
டிசம்பரில் அவரை இயக்குநராக சந்தித்தேன். ஹாலிவுட், பாலிவுட் எனது நிறைய தமிழ் படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார். ஐந்தாவது லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்னால் என்னிடம் காதலை தெரிவித்தார். என் மகள் அதை ஏற்றுக் கொள்ளும்படி என்னிடம் கூறினார்.
மஞ்சுளா தந்த தேதி
ஜூன் 27-ந் தேதியை திருமண தேதியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால். நான் எது செய்வதாக இருந்தாலும் என்னுடைய அம்மாவிடம்(மறைந்த நடிகை மஞ்சுளா) கேட்பேன். அதன்படி எனது திருமண தேதி பற்றி என் அம்மாவிடம் ஏதாவது சொல்லுங்கள் என்று நினைத்தபடி இருந்தேன். 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் என்னுடைய மொபைலை எடுத்து பார்த்த போது ஜூன் 27 என்ற தேதி மட்டும் கண்ணில் பட்டது. அப்போது நான் அழுதுவிட்டேன்.
அப்போது என்னுடைய காதலரும் என்னுடன் பேசினார். நான் 27-ந் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவரிடம் சட்டென கூறினேன். மகிழ்ச்சியடைந்த அவர் அதற்கு ஏன் அழுகிறாய் என்றார். நான் என் அம்மாவிடம் சம்மதம் கேட்டு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு ஜூன் 27-ந் தேதி என் போனில் தெரிந்தது.
அந்த தேதி தான் என்னுடைய அம்மா – அப்பாவுடைய கல்யாண நாள். அம்மாவுக்கு அது ரொம்பவும் ஸ்பெஷலான நாள். அந்த நாளில் திருமணம் செய்து கொள்வதால் என் பெற்றோரின் ஆசிர்வாதம் கிடைக்கும் என நினைக்கிறேன்.
இவ்வாறு வனிதா அந்த வீடியோவில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.