தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா
1 min readIn Tamil nadu 3.645 person affected for Corona Today
26-6-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று விரிவடைந்து வருகிறது. கொரோனா பரவல் பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,956 பேர் கொரோனா பாதித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 22 பேர், உள்நாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள் 41 பேர் .
வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக கப்பல் மூலம் வந்தவர்கள் 4 பேர் அடங்குவர்.
மேலும், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களில் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 32 ஆயிரத்து 305 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் 46 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 957 பேர் இறந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக…
இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர் – 4
செங்கல்பட்டு – 232
சென்னை – 1,956
கோவை – 41
கடலூர் – 17
தர்மபுரி – 5
திண்டுக்கல் – 2
ஈரோடு – 6
கள்ளக்குறிச்சி – 48
காஞ்சிபுரம் – 90
கன்னியாகுமரி – 25
கரூர் – 2
கிருஷ்ணகிரி – 14
மதுரை – 190
நாகை – 17
நாமக்கல் – 6
நீலகிரி – 7
புதுக்கோட்டை – 10
ராமநாதபுரம் – 68
ராணிப்பேட்டை – 53
சேலம் – 86
சிவகங்கை – 7
தென்காசி – 12
தஞ்சாவூர் – 25
தேனி – 40
திருப்பத்தூர் – 4
திருவள்ளூர் – 177
திருவண்ணாமலை – 66
திருவாரூர் – 16
தூத்துக்குடி – 36
திருநெல்வேலி – 18
திருப்பூர் – 14
திருச்சி – 32
வேலூர் – 148
விழுப்புரம் – 16
விருதுநகர் – 33
மொத்தம் – 3,523
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாலை, விமானம், கப்பல் மூலமாக சொந்த ஊர் வந்தவர்கள் மாவட்டம் வாரியாக வருமாறு:-
கோவை – 2
தருமபுரி – 1
கள்ளக்குறிச்சி – 10
கன்னியாகுமரி – 3
மதுரை – 4
ராமநாதபுரம் – 4
சேலம் – 25
திருவண்ணாமலை – 4
திருவாரூர் – 2
தூத்துக்குடி – 1
திருநெல்வேலி – 1
வேலூர் – 1
விழுப்புரம் – 1
மொத்தம் – 59
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 22 பேருக்கும் உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்களில் 41 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இவை எல்லாவற்றையும் சேர்த்து தமிழகத்தில் புதிதாக கொரோன உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,645 ஆக உள்ளது.