தமிழகத்தில் 4,343 பேருக்கு கொரோனா
1 min read4.343 person affected for Conona in Tamil Nadu one day
தமிழகத்தில் 4,343 பேருக்கு கொரோனா
2-7-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய்பட்டு உள்ளது.
4,343 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் மிக அதிகமா உள்ளது.
சென்னை உள்பட மாவட்டங்கிளல் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டப் பிறகும் கொரோனா குறைந்த பாடி்ல்லை. தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய வவரங்களை தினமும் மாலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2,027 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் சென்னையில் கொரோனாவால் , பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,598 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையை தவிர்த்து, இன்று, மதுரையில் 273 பேருக்கும், செங்கல்பட்டில் 171 பேருக்கும், திருவண்ணாமலையில் 170 பேருக்கும், திருவள்ளூரில் 164 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 139 பேருக்கும், வேலூரில் 138 பேருக்கும், ராணிப்பேட்டையில் 127 பேருக்கும், ராமநாதபுரத்தில் 117 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 112 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
57 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்க 57 பேர் இறந்துள்ளர். அதாது சென்னையில் 35 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், மதுரையில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கையில் தலா 2 பேரும், தேனி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசியில் தலா ஒருவரும் என 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.