தூத்துக்குடி பள்ளி விடுதி அறையில் ஆசிரியர் தற்கொலை
1 min readதூத்துக்குடி பள்ளி விடுதி அறையில்
ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
Teachers commit suicide in Thoothukudi school hostelதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்தவர் தாசன் மகன் ஆல்வின் (36). ஊழியம் செய்து வந்த இவர், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தார்.
தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்னர் அவர் தூத்துக்குடி வந்துள்ளார். தூத்துக்குடியில் அவர் பணிபுரியும், பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று பகலில் நீண்ட நேரமாக அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து பள்ளி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது ஆல்வின், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து.
இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆல்வினின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஆல்வின் உடல் தரையில் தட்டும் நிலையில் கிடந்துள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.