ரவுடிகள் பழிக்குப் பழி தாக்குதல் : 8 போலீசார் பலி
1 min readபோலீஸ்காரர்கள் மீது ரவுடிகள் பழிக்குப் பழி தாக்குதல் : 8 போலீசார் உயிரிழப்பு
8 policemen killedஉத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் குற்றவாளிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் கடந்த சில வாரங்களாக குற்றவாளிகளை அடக்க காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காவல்துறையினர் மீது ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இதில் 8 போலீசார் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
போலீசாரிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து விட்டு குற்றவாளிகள் தப்பிச்சென்று விட்டனர். தப்பியோடிய குற்றவாளிகளை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.