தமிழகத்தில் ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா ; மதுரையில் 464 பேர்
1 min read4.328 person affected for corona – Madura 467
13-7-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4,328 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 105 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் 53 அரசு ஆய்வகம், 52 தனியார் ஆய்வகம் ஆகும்.
இவைகள் மூலம் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 4,328 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அதில் 4,270 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என 58 பேர். இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 44,560 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து 16,54,008 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.
இன்று மட்டும் 43,548 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 15,85,782 ஆக அதிகரித்தது.
66 பேர் சாவு
இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,576 பேர் ஆண்கள். 1752 பேர் பெண்கள். இதனால், மொத்த கொரோனா பாதிப்பில், 87,111 பேர் ஆண்கள். 55,664 பேர் பெண்கள் மற்றும் 23 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
இன்று மட்டும், 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 92,567 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 48, 196 பேர் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் 66 பேர்கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களில் 50 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 16 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிக்சை பெற்றவர்கள் ஆவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. மேற்கண்டவாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில் அதிகபட்சமாக 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில், 1,140 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னைக்கு அடுத்த இடத்தில், மதுரையில் இன்று அதிகபட்சமாக 464 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரையில் மொத்த பாதிப்பு 6539 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் 337 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், கன்னியாகுமரியில் 184 பேருக்கும், விழுப்புரத்தில் 136 பேருக்கும், தேனியில் 134 பேருக்கும், வேலூரில் 129 பேருக்கும், ராணிப்பேட்டையில் 126 பேருக்கும், திருநெல்வேலியில் 113 பேருக்கும், தூத்துக்குடியில் 122 பேருக்கும், தென்காசியில் 39 பேருக்கும் இன்று கொரோனா உறுதியானது.