June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஊரடங்கு காலத்திலும் நடித்து வரும் நயன்தாரா

1 min read


Nayanthara who is also acting during the curfew

18-7-2020

தமிழில் நம்பர் ஒன் நடியைாக இருக்கும் நயன்தாரா இந்த ஊரங்கு காலத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா

கடந்த 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. 2005-ம் ஆண்டு ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடத்ததன் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.
தற்போது நம்பர் ஒன் நடிகையாக திகழும் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

கொரோனா ஊரடங்கினால் நயன்தாரா வீட்டில் இருக்கிறார். அவர் படங்களில் நடித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய மேலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

விளம்பர படம்

ஊரடங்கில் அடிக்கடி தனது புகைபடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். கொரோனாவுடன் இணைத்து வெளியான வதந்திக்கும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பதிலடி கொடுத்தார்.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருந்து வரும் நயன்தாரா தற்போது விளம்பர படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். வீட்டிலேயே இதன் படப்பிடிப்பை முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில விளம்பர படங்களில் நடிக்க வைப்பதற்காக முன்னணி நிறுவனங்கள் அவரை அணுகி வருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.