இந்தியாவில் ஒரே நாளில் 48,704 பேருக்கு கொரோனா 654 பேர் சாவு
1 min readAll over Indai person affected and death 654 for corona today
28-7-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 48,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 654 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
48,704பேருக்கு கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று(திங்கட் கிழமை)) ஒரே நாளில், 48,704பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 14,83,157 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 654 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 33,425 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 35,175 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9,52,744 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,96,988 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.