சீனா அருகே அமெரிக்க போர் விமானங்கள்
1 min read
U.S. warplanes flew near China
28-7-2020
சீனா அருகே அமெரிக்கா தனது போர் விமானங்களை பறக்கவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனா-அமெரிக்கா
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீப காலமாக இறுக்கமான சூழலே நிலவி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு காரணமே சீனாதான் என்று அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருகிறது. மேலும் கொரோனா மருந்து ஆராய்ச்சி சம்பந்தமான முடிவுகளை உடனே தராதது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் ஒரு நடவடிக்கையாக அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா அதிரடியாக மூடியது. இதனை அடுத்து, சீனாவும் பதில் நடவடிக்கையில் இறங்கியது. சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை சீனா மூடியது.
போர் விமானம்
இந்த நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, ‘பி – 8ஏ’ மற்றும் ‘இ.பி. – 3இ’ ஆகிய 2 போர் விமானங்கள், கிழக்காசிய நாடான, தைவான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் சேஜியாங் மற்றும் புஜியான் கடல் பகுதிக்குள், நேற்று முன் தினம் நுழைந்தது.
சீன வர்த்தக தலைநகராக கருதப்படும், ஷாங்காய் நகரில் இருந்து, 76 கி.மீ., தொலைவில், இந்த விமானங்கள் பறந்தன. சீன நகருக்கு மிக அருகே, அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது, இதுவே முதல் முறை’ என, கூறப்படுகிறது.