May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய சுவப்னாவுக்கு உதவிய ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் விசாரணை

1 min read
Gold smuggling case - IAS Inquiry to the officer

28-7-2020

கேரள தங்க கடத்தல் வழக்கு – ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விசாரணை

கேரள மாநிலத்தில், தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுவப்னா சுரேஷ்

தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான  சுவப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளராக இருந்த அவர், தங்க கடத்தல் கும்பலுக்கு தலைமைச் செயலகம் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 

போலி சான்றிதழ் மூலம் கேரள அரசின் ஐ.டி துறையில் சுவப்னா சுரேஷுக்கு உயர் பதவி கிடைக்க உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

விசாரணை

இதையடுத்து, பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய புலனாய்வு அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சிவசங்கரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கொச்சி என்.ஐ.ஏ அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, குற்றவாளிகளுடன் சிவசங்கருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள், மீண்டும் இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கரனுக்கு  உத்தரவிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.