கருவில் இருக்கும் குழந்தைக்கும் கொரோனா
1 min read
Corona for the unborn child
29-7-2020
நாட்டில் முதல்முறையாக, கருவில் இருக்கும் குழந்தையையும் கொரோனா தாக்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கருவில் உள்ள குழந்தை
கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு பெண்ணிற்கு வந்த கொரோனா அவள் வயிற்றில் வளரும் குழந்தையையும் தாக்குவது இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆனால் இப்போது முதன்முறையாக மராட்டிய மாநிலம் புனே சாசூன் பொது மருத்துவமனையில், கொரோனா அறிகுறிகள் தென்படாத தாயிடமிருந்து, தொப்புள் கொடி வழியாக, கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிரசவத்திற்கு முன்பே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா முடிவுகள் ‘நெகடிவ்’ என வந்த நிலையில், குழந்தை பிறந்த பின், பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
டிஜ்சார்ஜ்
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி, சளி ஆகியவற்றை சோதனை செய்ததில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் குழந்தை குணமானதையடுத்து, தாயும், சேயும் டிஸ்சார்ஜ் செய்ப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.