தமிழ்நாட்டில் சென்னை கலெக்டர் உள்பட 6,972 பேருக்கு கொரோனா
1 min readIN Tamil Nadu 6.972 person incloud chenai collecter affected for corona
29-7-2020
தமிழ்நாட்டில் சென்னை கலெக்டர் உள்பட 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
6,972 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
தமிழகத்தில் ஒரேநாளில் அதாவது செவ்வாய்க்கிழமை) மட்டம் 6,972 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,908 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 64 பேர். இதனால் கொரோானாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்கள் மூலமாக, செவ்வாய் அன்று மட்டும் 61,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரத்து 866 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 4,233 பேர் ஆண்கள், 2,739 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,38,163 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 89,502 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,707 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 956 ஆக உள்ளது.
88 பேர் சாவு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 88 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 65 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,659 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 57,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 11,379 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,88,015 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28 ஆயிரத்து 294 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கலெக்டர்
சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி கிண்டி கிங் இன்ஸ்டியூட் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.