June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

வாழ நினைத்தால் வாழலாம் / கவிதை நடையில் ஒரு கதை

1 min read

Vala ninaththal valalam / poest story by E.S.k.Kumaresan

வாழநினைத்தால் வாழலாம் எழுதியவர் E.S.K.Kumaresan

======

அவள் ஆகாய நிலவானாலும்
ஆழ்கடல் முத்தானாலும்
ஆகாத நட்சத்திரத்தில்
ஆளான அந்தப் பெண் வேண்டாம்.

மாமன் மகள் மாலாவை மணம் முடித்து வைக்கிறேன் மனம் போல் வாழலாம் மதிபோல் ஆளலாம்

என்று கண்ணம்மா தன் கருத்தை நிறைவாக எடுத்துரைதுரைத்த போதும்…

அவள், கருத்துக்கு மாறாக கண்ணுக்கு மறைவாக நடந்து முடிந்தது அவள் மகன் கதிரவனின் கல்யாணம்.

அதற்கு ஆதரவு அளித்த தன் கணவன் கருணாகரனிடம் கடல்போல் காசு இருப்பதால் வந்த தைரியமா?
இல்லை உரல் போல் உடல் இருப்பதால் வந்த
தைரியமா?

மாமன் மாமியாருக்கு மரணத்தை பரிசாகும்
மூல நட்சத்திரத்தில் முழு மதியான அந்தப் பெண்ணை அடுக்களை அரசியாக நம் ஆத்துக்குள் அழைத்து வர

மதி கெட்டு விட்டதா?

இல்லை விதி வென்று விட்டதா?
-என்று
வக்கீலாய் வாதத்தை வளர்த்த கண்ணம்மா…

“என் வார்த்தை வாழாத இந்த வீட்டில் இனி நான் வாழ்ந்தால் வாழ்வு இனிக்காது” என்று வாதத்தை முடித்துப் புறப்பட்டாள், அவள் பிறந்த வீட்டிற்கு…

அவளைதடுத்து நிறுத்த, புது மணமக்களை புதியதொரு வீட்டில் தனி குடியாக தள்ளி வைத்தான் கருணாகரன்.
இவைகள் நடந்து இருபது ஆண்டுகள் இருக்கும்.

ஒரு நாள்…

ஓடும் பஸ்ஸில் நின்று கொண்டே பயணித்த கண்ணம்மாவுக்கு தலைச்சுற்று ஏற்பட்டு மயங்கிக் கீழே சாய்ந்தாள்.
அவளை தாங்கிப்பிடித்து தண்ணீர் தெளித்து தன் இருக்கையில் அமரவைத்து அவசர உதவி அளித்த அரசு மருத்துவக் கல்லூரி மாணவி கயல், கண்ணம்மாவுக்கு துணையான அவள் துணிப்பையை தூக்கி கொண்டு அவள் வீடு வரை வந்தவள், ” பாட்டி இனி தனியாக எங்கும் போக வேண்டாம்” என்று கனிவாக சொல்லி சென்றாள்.
தாமதத்தின் காரணத்தை தாய் கண்மணி கேட்க கயல் என்ற கயல்விழி சொல்ல

ஆகாயம் அதிரும் வண்ணம் சத்தம்போட்டு அழுத கதிரவனேடு சத்தம் இல்லாமல் அழுத கண்மணியிடம்,

“யாரம்மா அந்தப் பாட்டி?” என்றாள் கயல்.”
நான் தானம்மா உனது பாட்டி” என்ற பதிலோடு வீட்டிற்கு உள்ளே வந்த கண்ணம்மாவின் கால்களின் கதிரவனும் கண்மணியும் விழுந்த மன்னிப்பு கேட்க,

“மூடநம்பிக்கையின் முட்டாள் தனத்தால் முத்தான வாழ்வை முள்ளாக்கிய நான் அல்லவா கேட்க வேண்டும் மன்னிப்பு “என்று மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தவள்.
“வாருங்கள் இனி வாழும் காலம் வரை வாழ்வோம் ஒன்றாக” என்றும் வாழ நினைத்து வாழ அழைத்தவள் இன்னும் வாழ்கிறாள் சுமங்கலியாக அவளுக்கு வயது 108.

   -எண்ணம், எழுத்து-ESK குமரேசன், கடையம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.