பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரணியம் கவலைக்கிடம்
1 min read
SP Balasubramaniam is worried for corona
14-8-2020
பிரபல பின்னணி பாடகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
திரையுலகில் பலரை கொரோனா தாக்கி உள்ளது. பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், இவரது மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் இவர்களது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருந்தது. பின்னர் அவர்கள் குணமாகி வீடு திரும்பினார்கள். தமிழ் பட டைரக்டர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
தனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனை முடிவில் பாசிடிவ் என வந்தது என்றும் பயப்படும் படியாக இல்லை என்றும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கவலைக்கிடம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் எந்தவித பிரச்சினையுமின்றி நலமாக இருப்பதாக நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இன்று (வியாழக்கிழமை) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 5-ந் தேதி கொரோனா வைரஸ் நோய் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 13-ந் தேதி இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் குழுவின் அறிவுரைகளின்படி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
இவர் தற்போது மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல் உறுப்புகளிடையே மற்றும் திசுக்களிடையே ரத்த ஓட்ட இயக்கமான ஹீமோடைனமிக் மற்றும் பிற உடல்நிலை மருத்துவ அளவுகோல்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.