June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

“தமிழ்நாட்டை ஆழ வேண்டும் என்ற ரஜினியின் கனவு, கனவாகவே இருக்கும்”- மீரா மிதுன்

1 min read


“Rajini’s dream of deepening Tamil Nadu will be a dream” – Mira Mithun

15-8-2020

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் மீது மிக மோசமான விமர்சனங்களை அவர் வைத்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையான வகையில் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

கனவு

தற்போது நடிகர் ரஜினிகாந்தை டார்கெட் செய்து ஒரு டுவிட்டை பதிவு செய்து இருக்கிறார் மீரா மிதுன். “ரஜினிகாந்த் 45 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்து இருப்பதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் “45YearsOfSuperStarRajini” என்ற ஹாஸ் டேக் உருவாக்கி அதில் பதிவிட்டு வருகிறார்கள். அதை குறிப்பிட்டு தான் மீரா மிதுன் டுவிட்டரில் பேசி இருக்கிறார்.

“45YearsOfSuperStarRajini சந்தேகமே இல்லாமல், ஒரு பஸ் கண்டக்டராக இருந்தா ஒருவர் வெற்றி பெற்ற நடிகராக வளர்ந்து இருப்பது சிறந்த விஷயம் தான். ஆனால் அவரது அரசியல் லட்சியம் மற்றும் தமிழ்நாட்டை ஆழ வேண்டும் என்கிற அவரது கனவு எப்போதும் கனவாகவே இருக்கும்” என டுவிட் செய்து இருக்கிறார்.

இதை பார்த்து ரஜினி ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பல ரசிகர்கள் மீரா மிதுனை வலைதளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

ஏற்கனவே மீரா மிதுனுக்கு பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மீரா மிதுன் தனது சர்ச்சை பேச்சை நிறுத்திய பாடில்லை.

கொலை மிரட்டல் புகார்

இந்த நிலையில் மீரா மிதுன் மீது பிரபல நடிகை ஷாலு ஷம்மு நேற்று போலீசில் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார். புகாரில் மீரா மிதுன் தன்னைப் பற்றி பேசுவதை நிறுத்தவில்லையென்றால் உன்னை கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என போனில் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார் என ஷாலு ஷம்மு கூறி இருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.