எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது ; மருத்துவமனை தகவல்
1 min read
SP Balasubramaniam Physical condition is stable; Hospital information
15-8-2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மருத்துவை மனை அறிவித்தது.
மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று பலர் கடவுனை வேண்டினார்கள். இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
சீரான உள்ளது
இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.