கொரோனா சிகிச்சைக்கு பின் மீண்டும் ஏட்டு சிறையில் அடைப்பு
1 min read
17.8.2020
Policeman jailed again after corona treatmentதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் ேபாலீசாரால் தாக்கப்பட்டு இறந்தனர். இச்சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ பால்துரை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையிலிருந்த எஸ்ஐ பால்துரை உள்ளிட்ட 3 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதித்தது. இதனையடுத்து இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், கடந்த 10ம் தேதி எஸ்ஐ பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏட்டுகள் முத்துராஜா மற்றும் முருகன் ஆகியோர் தொடர் சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முத்துராஜா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று ஏட்டு முருகனும் குணமடைந்தார். இதனை தொடர்ந்து அவர், மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏட்டுகள் முத்துராஜா மற்றும் முருகன் ஆகியோர் சிறையில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.