தொடர் சிகிச்சையால் இன்னும் 10 நாட்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இயல்பாக சுவாசிக்க முடியும்-டாக்டர்கள் அறிவிப்பு
1 min read
SP Balasubramaniam can breathe normally in 10 more days with continuous treatment
18-8-2020
பின்னணி பாடகல் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இன்னும் 10 அல்லது 12 நாட்களில் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியும் என்று டாக்டர்கள் கூறினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(வயது 75) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மோசமானதால் ஆஸ்பத்திரியில், தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அவருக்கு, உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கிக்கொண்டிருப்பினும், நுரையீரல் செயல்பாடு இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக, உயிர்காக்கும் உபகரணங்கள் வாயிலாக தொடர்ந்து ‘ஆக்ஸிஜன்’ அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியுள்ளது.
தற்போது போன்றே, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், சேதமடைந்த நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து சீரான நிலைக்கு திரும்பும். அவரால், 10 முதல் 12 நாட்களில் இயல்பாக சுவாசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். “அந்த நல்ல நாளுக்காகவே நாங்களும், அவரது பல லட்சம் ரசிகர்களும் காத்திருக்கிறோம்”, எனவும் டாக்டர்கள் கூறினார்.