எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வசந்தகுமார் உடல் நிலை சீராக உள்ளது
1 min readSP Balasubramaniam and H.Vasanthakumarcondition is stable
26-8-2020
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எச். வசந்தகுமார் உடல் நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கொரோன பரிசோதனை
கொரோனா பரிசோதனை முடிவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை ஆகிறது. ஆனால் 24 மணி நேரத்தில்
எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக 2 பேட்டரி கார்களையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
சீராக உள்ளது
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கட்டுக்குள்தான் உள்ளது. கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா உயிரிழப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்பட்டால் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை சீராக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிக்சைக்கு தேவையான வசதிகளை வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.