தமிழகத்தில் ஒரே நாளில் 5,958 பேருக்கு கொரோனா; 5,606 பேர் டிஸ்சார்ஜ்
1 min readCorona for 5,958 people in Tamil Nadu; 5,606 discharged one day
26-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 5,606 பேர் குணம்அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
5,958 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( புதன்கிழமை) வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( புதன்கிழமை) மட்டும் 5,958 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,943 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 15 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 145 ஆய்வகங்களில் இன்று மட்டும் 75,500 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 44 லட்சத்து 22 ஆயிரத்து 6361 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,651 பேர் ஆண்கள், 2,306 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,39,946 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,57,286 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களினல் இன்று மட்டும் 5,606 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளது.
118 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 118 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 77 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 41 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6,839 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 52,362 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 18 ஆயிரத்து 663 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 531 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 51 ஆயிரத்து 067 பேர்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று1,290 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,29,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர கோவையில் 484 பேருக்கும், சேலத்தில் 451 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 329 பேருக்கும், செங்கல்பட்டில் 294 பேருக்கும், கடலூரில் 286 பேருக்கும், திருவள்ளூரில் 280 பேருக்கும், விழுப்புரத்தில் 189 பேருக்கும், தேனியில் 184 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 156 பேருக்கும், தூத்துக்குடியில் 105 பேருக்கும், தென்காசியில் 98 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.
சென்னையில் மட்டும் இன்று கொரோனாவுக்கு 20 பேர் இறந்துள்ளனர். கோவையில் 10 பேரும், காஞ்சிபுரம், சேலத்தில் 8 பேரும், தஞ்சாவூர், திருநெல்வேலியில் தலா 6 பேரும், ஈரோடு, கன்னியாகுமரி, வேலூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, விருதுநகரில் தலா 4 பேரும், ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, திருப்பூரில் தலா 3 பேரும், அரியலூர், கடலூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடியில் தலா 2 பேரும், கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,137 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,13,092 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் 359 பேரும், கடலூரில் 333 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், திருவள்ளூரில் 304 பேரும், சேலம், தேனியில் தலா 222 பேரும், காஞ்சிபுரத்தில் 219 பேரும், திருப்பூரில் 182 பேரும், புதுக்கோட்டையில் 181 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.