சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் நடிகை கங்கனாவை சுதந்திரமாக பேச வேண்டும்- மந்திரி வற்புறுத்தல்
1 min read
Actress Kangana Ranaut should speak freely in Sushant Singh suicide case- Minister persuades
5-9-2020
இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை சுதந்திரமாக பேசவிட வேண்டும் என்ற அரியானா மாநில மந்திரி கூறினார்.
சுஷாந்த் சிங் தற்கொலை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14- ந்தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் மன உளைச்சலால் தான் தற்கொலை செய்துகொண்டதாக நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார்.
மேலும்நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட்டில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இதுதவிர மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார்.
கங்கனாவின் இந்த பேச்சுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சயத் ராவுத் கண்டனம் தெரிவித்தார். மும்பை அல்லது மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்தவோ, அவமதிக்கவோ முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என அவர் கூறினார்.
கண்டனம்
வரும் 9-ந்தேதி கங்கனா மும்பைக்கு விமானத்தில் வருவதாக கூறப்படுகிறது. அப்படி அவர் வந்தால் சிவசேனா பெண் உறுப்பினர்கள் கன்னத்தில் அறைவார்கள் என்றும் கூறினார்.
சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. பிரதாப் சர்னாயக் கூறும்போது, நடிகை கங்கனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலடியாக பிரதாப் சர்னாயக்கை கைது செய்யப்பட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
ஆதரவு குரல்
இந்த நிலையில் அரியானா மாநில உள்துறை மந்திரியாக இருக்கும் அனில் விஜ் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில், நடிகை கங்கனா ரனாவத் சுதந்திரமாக உண்மையை பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.
மராட்டிய முன்னாள் முதல் மந்திரி பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பேச்சு சுதந்திரம் பற்றி பேசி வரும் நிலையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் விஜ் பேசியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அனில் விஜ் கூறியுள்ளார்.