எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆஸ்பத்திரியில் திருமண நாளை கொண்டாடினார்
1 min read
S.P. Balasubramaniam celebrated his wedding day at the hospital
5-9-2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது திருமணநாளை மனைவியுடன் ஆஸ்பத்திரியில் கேக் வெட்டி கொண்டாடினர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் உள்ளார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. அவருக்கு, ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன், எம்.ஜி.எம்., மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
அவருக்கு ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நுரையீரல் செயல்பாடு இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான சிகிக்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை அடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி.,மகன் சரண் வெளியிட்ட வீடியோவில், “அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும், வரும் திங்கட் கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என நம்புகிறேன்” என கூறியிருந்தார்.
திருமணநாள்
இந்த நிலையில் இன்று ( சனிக்கிழமை எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு திருமண நாள். இதையொட்டி அவர் தன்னுடைய மனைவி சாவித்திரியுடன் அவர் சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் திருமணநாளை கொண்டாடினார். அதாவது பிரத்யேகமாக வாங்கி வரப்பட்ட கேக் ஒன்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள ஐ.சி.யூ. வார்டில் வைக்கப்பட்டது.
டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் அவரது மனைவி சாவித்திரியும் கேக் வெட்டி கொண்டாடினர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் படுத்து கொண்டே கேக் வெட்டினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை நன்றாக தேறிவருபதை அறியலாம்.