May 1, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று மட்டும் 5,569 பேருக்கு கொரோனா; 5,556 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 5,569 people in Tamil Nadu today alone; 5,556 discharged

19-9-2020

தமிழகத்தில் இன்று மட்டும் 5,569 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் 5,556 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தினமும் மாலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ( சனிக்கிழமை) மட்டும் 5,569 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 175 ஆய்வகங்களில் 85,117 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 63 லட்சத்து 88 ஆயிரத்து 583 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
தமிழகத்தில் இன்று 83265 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 6190593 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று மட்டும் 5,556 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 66 பேர் இறந்தனர். இவர்களையும் சேர்த்து கொரோனா இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,751 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதித்த 46,453 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில்

சென்னையில் மட்டும் இன்று 987 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் 154624 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் மொத்தம் 9,966 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.