May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா

1 min read

Corona to Vice President Venkaiah Naidu

29-/–9/ —2020

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வெங்கையா நாயுடு

கடந்த 14-ந் தேதி முதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. வருகிற (அக்டோபர்)1-ந் தேதி வரையில் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பிக்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட எம்.பி.க்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப் பட்டுள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தி கொண்டுள்ளார்.
வெங்கயைா நாயுடுவின் மனைவிக்கு கொரோனாதொற்று உறுதிபடுத்தப்படவில்லை.

டெல்லி துணை முதல்மந்திரி

டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியாவுக்கு கடந்த 14 -ந் தேதி டிகொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தனது வீட்டிலேயே தனிமையில் இருந்தார். ஆனால் அதிக காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு குறைந்ததால், 23-ந் தேதி அன்று லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிசோடியா மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சோதனையில் டெங்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா மற்றும் டெங்கு போன்ற இரட்டை நோய்களால் பாதிக்கப்பட்ட சிசோடியாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால் மணீஷ் சிசோடியா, இன்று (செவ்வாய்க்கிழமை ) கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்பதுஉறுதியாகியது. அதனால் அவர் வீடு திரும்பினார். ஆனாலும் ஒரு வாரம் வரை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.