தமிழகத்தில் இன்று 5,596 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readIn Tamil Nadu today 5,596 people recovered from the corona
3/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,596 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றி தினமும் தமிழக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,614 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 8 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டுமு் 189 ஆய்வகங்களில் 87,311 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 76 லட்சத்து 13 ஆயிரத்து 999 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,417 பேர் ஆண்கள். 2,205 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்து 963 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 513 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகும்.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,596 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 5 லட்சத்து 58 ஆயிரத்து 534 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 65 பேர் இறந்துள்ளனர். இதில் 41 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 24 பேர் தனியார் ஆஸ்பத்திரிளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 46,294 பேர் கொரோனாவுக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 1,364 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சென்னையைத் தவிர கோவையில் 486 பேருக்கும், செங்கல்பட்டில் 395 பேருக்கும், சேலத்தில் 351 பேருக்கும், திருவள்ளூரில் 290 பேருக்கும், தஞ்சாவூரில் 244 பேருக்கும், திருப்பூரில் 167 பேருக்கும், காஞ்சிபுரம், நாமக்கலில் தலா 150 பேருக்கும், நீலகிரியில் 146 பேருக்கும், கடலூரில் 145 பேருக்கும், ஈரோடில் 144 பேருக்கும், திருவாரூரில் 143 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
நெல்லை
திருநெல்வேலியில் 76 பேருக்கும் தென்காசியில் 30 பேருக்கும், தூத்துக்குடியில் 75 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்று கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை.
மாவட்ட வாரியாக இறப்பு
சென்னையில் 21 பேரும், சேலத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும், கோவை, திருவள்ளூரில் தலா 5 பேரும், காஞ்சிபுரம், திருப்பூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டையில் தலா 2 பேரும், திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருச்சி, வேலூர், விருதுநகரில் தலா ஒருவரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று 1,071 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,842 ஆகும்.
கோவையில் இன்று 685 பேரும், தஞ்சாவூரில் 335 பேரும், சேலத்தில் 331 பேரும், திருப்பூரில் 286 பேரும், செங்கல்பட்டில் 213 பேரும், திருவள்ளூரில் 210 பேரும், ஈரோடில் 178 பேரும், திருவண்ணாமலையில் 177 பேரும், விழுப்புரத்தில் 158 பேரும், காஞ்சிபுரத்தில் 152 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்