உத்தரபிரதேசத்தை கலவர பூமியாக மாற்ற சதி; முதல்மந்திரி குற்றச்சாட்டு
1 min readConspiracy to turn Uttar Pradesh into a land of unrest; cheep Minister toled
5/10/2020
உத்தரபிரதேசத்தை கலவர பூமியாக மாற்ற சதி நடப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறினார்.
பெண் பாலியல் பலாத்காரம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசிஸ் என்னும் இடத்தில் 19 வயது தலித் பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அந்த கும்பல் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த அந்த பெண், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்தார். அந்தப் பெண்ணின் உடலை பெற்றோருக்கு தெரிவிக்காமல் போலீஸ் பாதுகாப்போடு இரவோடு இரவாக எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-
கலவர பூமி
கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் மாநிலத்தில் கலவரங்களைக் காண ஆர்வமாக இருந்தன. சமூக விரோத மற்றும் தேசிய விரோத சக்திகளால், உத்தரபிரதேசத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த மாநிலத்தை கலவர பூமியாக மாற்ற அவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.