தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 5,395 ; டிஸ்சார்ஜ் 5,572
1 min read5,395 corona infections in Tamil Nadu today – Discharge 5,572
5/10/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் 5,572 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா பற்றிய நிலவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:- தமிழகத்தில் இன்று ( திங்கட்கிழமை) 5,395 பேருக்கு கொரோனா தொற்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 5,388 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 189 ஆய்வகங்களில் 82,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 77 லட்சத்து 82 ஆயிரத்து 736 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,356 பேர் ஆண்கள். 2,139 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 541 . பெண்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 819. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,572 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 62 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் 31 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 31 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9,846 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 45,881 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும் 1,367 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,74,143 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையைத் தவிர இன்று கோவையில் 468 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும், சேலத்தில் 337 பேருக்கும், தஞ்சாவூரில் 251 பேருக்கும், திருவள்ளூரில் 195 பேருக்கும், நீலகிரியில் 169 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 155 பேருக்கும், நாமக்கலில் 147 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 81பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 38 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 55 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்காசியில் 2 பேர் சாவு
இன்று சென்னையில் 19 பேரும், கோவையில் 7 பேரும், திருப்பத்தூரில் 4 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூரில் தலா 3 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சாவூர், வேலூரில் தலா 2 பேரும், அரியலூர், மதுரை, புதுக்கோட்டை, சேலம், தேனி, திருவள்ளூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்று சென்னயைில் மட்டும் 1,074 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,58,290 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 460 பேரும், தஞ்சாவூரில் 399 பேரும், சேலத்தில் 373 பேரும், செங்கல்பட்டில் 215 பேரும், திருவள்ளூரில் 207 பேரும், கடலூரில் 188 பேரும், காஞ்சிபுரத்தில் 169 பேரும், கன்னியாகுமரியில் 158 பேரும், திருப்பூரில் 152 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.