எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் மோட்சதீபம்
1 min readMotsadeepam at Arunachaleshwarar Temple for Sp Balasubramaniam
9/10/2020
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியதுக்கு சினிமா பின்னணி பாடகர்கள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றினர்
மோட்ச தீபம்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கடந்த மாதம் 25-ந் தேதி மரணம் அடைந்தார். இவரது உடல் மறுநாள் 26-ந் தேதி சென்னை தாமரைப்பாக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, சினிமா பின்னணி பாடகர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றினர்.
அருணாசலேஸ்வரர் கோவில், இரண்டாம் பிரகாரத்தில் சர விளக்கு பகுதியில், மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி, அருணாசலேஸ்வரரை வேண்டி பாடல்கள் பாடினர்.
பாடகர்கள்
இதில், கலெக்டர் கந்தசாமி, சினிமா பின்னணி பாடகர்கள் பாடகர்கள் மனோ, எஸ்.பி. ஜைலஷா, அனுராதா ஸ்ரீராம், நடிகர்கள் மயில்சாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.