நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா நிலவரம்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2020/07/நெல்லை-அரசு-மருத்துவக்கல்லூரி.jpg)
Corona situation in Nellai, Tenkasi and Thoothukudi districts
19/10/2020
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று ( திங்கட்கிழமை) ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின்மொத்த எண்ணிக்கை 13916 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இந்த மாவட்டத்தில் மொத்தம் 13166 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த மாவட்டத்தில் 545 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 22 பேருக்கு கரோனா உறுதி : 20 பேர் டிஸ்சார்ஜ்
திங்கள் 19, அக்டோபர் 2020 6:27:47 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7740 ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 7434 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த மாவட்டத்தில் மொத்தம் 155 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14537 ஆக அதிகரித்தது. இன்று மட்டும் 35 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும்சேர்த்து இதுவரை இநத மாவட்டத்தில் 13851 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 560 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உள்ளது.