தமிழகத்தில் கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி
1 min readPermission to open shops in Tamil Nadu for extra time
21/10/2020
தமிகத்தில் ஊரங்கில் சில தளர்வுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளிவித்தார். அதன்படி கடைகளை கூடுதல் நேரம் தமிறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு உ்ளளது.
இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
இரவு 10 மணி வரை
- தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
- பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- கடைகளின் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. - நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம்.
- பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்