கள்ளக்காதலியுடன் இருந்த போலீஸ்காரரை அடித்து உதைத்த மனைவி
1 min readThe wife who beat up a policeman who was with a fake girlfriend
23/10/2020
கள்ளக்காதலியுடன் லாட்ஜில் தங்கி இருந்து போலீஸ்காரரை அவர் மனைவி அடித்து உதைத்தார்.
போலீஸ்காரரின் மனைவி
தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்குத் தெரியாமல், வேறு ஒரு பெண்ணுடன்தொடர்பில் இருந்துள்ளார். இதனை கேள்விபட்ட மனைவி, கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் சுபாஷ் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பழகி வந்தார்.
இந்தநிலையில், வேலைக்குச் செல்வதாகக் கூறி வெளியே சென்ற சுபாஷ், தனது காதலியுடன் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.
இதனைத் தெரிந்து கொண்ட மனைவி, தனது உறவுக்காரர்களுடன் சென்று, கணவருடன் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் சரமாரியாக அவரை அடித்து உதைத்தார்.
கணவருடன் இருந்த அந்தப் பெண்ணுக்கும் தர்ம அடி விழுந்தது.
பொறியில் மாட்டிக் கொண்ட எலி போல, கையும் களவுமாக சிக்கிக் கொண்ட சுபாசை, மனைவியின் உறவினர்களும் அடித்து உதைத்து பின்னர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெலங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.