சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்
1 min read20 years in jail for a teenager who kidnapped a girl and married her
24/10/2020
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடத்தி திருமணம்
கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த பிள்ளம நாயக்கர் கூடலூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 32). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி இரவு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை தனது உறவினர்கள் உதவியுடன் கடத்திச் சென்று திருமணம் செய்துவிட்டார்.
இதுகுறித்து, சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜ் உட்பட 13 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
20 ஆண்டு ஜெயில்
அவர் சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஜெயராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணன் ஜெயபால்(37), தந்தை பிள்ளமநாயக்கர்(59) உள்பட 9 பேருக்கு தலா 3 ஆண்டு, 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில், 80 வயதான சீலாநாயக்கர் என்பவர் வயது மூப்பு காரணமாக விடுவிக்கப்பட்டார்.